அய்யனார் சாஸ்தா கோவிலில் சிறப்பு பூஜை

சில்லாங்குளம் நலம்தரும் அய்யனார் சாஸ்தா கோவிலில் அ.தி.மு.க.வினர் சிறப்பு பூஜை நடத்தினர்.

Update: 2023-04-07 18:45 GMT

எட்டயபுரம்:

அ.தி.மு.க பொதுச்செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்றதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ ஆலோசனைப்படி விளாத்திகுளம் அருகே உள்ள சில்லாங்குளம் நலம்தரும் அய்யனார் சாஸ்தா கோவிலில் சிறப்பு பூஜை, தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து கோவில்பட்டி ஆவின் தலைவர் தாமோதரன், எட்டயபுரம் நகர செயலாளர் ராஜகுமார், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வீரபாண்டி ஆகியோரின் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்