முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை

முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2023-10-04 18:16 GMT

புகழிமலை பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் சஷ்டியையொட்டி சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல் நன்செய் புகழூர், பாலமலை மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்