சிவசக்தி ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை

நல்லகுட்லஅள்ளியில் சிவசக்தி ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2022-09-23 18:45 GMT

மொரப்பூர்:

கடத்தூர் அருகே உள்ள நல்லகுட்லஅள்ளியில் சிவசக்தி ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து நந்திக்கு பன்னீர், சந்தனம், மஞ்சள், நெய், பால், இளநீர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றன. பின்னர் சாமிக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்