ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

நீடாமங்கலம், கூத்தாநல்லூர் பகுதிகளில் ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-01-28 18:45 GMT

நீடாமங்கலம்:

நீடாமங்கலம், கூத்தாநல்லூர் பகுதிகளில் ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு வழிபாடு

நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமர், விஸ்வக்சேனர், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கடஹர மங்களமாருதி ஆஞ்சநேயர் கோவிலில் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதனைமுன்னிட்டு 33 அடி உயர ஆஞ்சநேயருக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது.

இதேபோல் ஆலங்குடி அபயவரதராஜப் பெருமாள் கோவில், நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட பல்வேறு ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

கூத்தாநல்லூர்

கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடியில் வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக ஆஞ்சநேயருக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள்பொடி, வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வடமாலை, துளசி மற்றும் அருகம்புல் மாலை சாத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்