பூரம் நட்சத்திரத்தையொட்டி சிறப்பு வழிபாடு

பூரம் நட்சத்திரத்தையொட்டி சிறப்பு வழிபாடு;

Update:2023-08-19 02:17 IST

அம்மாப்பேட்டை மார்வாடி தெருவில் உள்ள வீரமகா காளியம்மன் கோவிலில் ஆவணி மாத பூரம் நட்சத்திரத்தையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு அம்மனுக்கு மலர், வளையல் ஆகியவற்றால் அலங்காரம் செய்து வழிபட்டனர். அதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் நெய்விளக்கு ஏற்றி வைத்து, அர்ச்சனைகள் செய்தனர். .இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்