ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.64½ லட்சம் வசூல்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.64½ லட்சம் வசூலானது.

Update: 2022-06-23 19:58 GMT

ஸ்ரீரங்கம்:

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள் மாதந்தோறும் உண்டியலை திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று கருட மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் நடைபெற்றது.

இதில் ரூ.64 லட்சத்து 45 ஆயிரத்து 942 ரொக்கமும், 148 கிராம் தங்கமும், 990 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு பணம் 233-ம் கிடைத்தது. உண்டியல் எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டர்களும் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்