ஸ்ரீவைகுண்டம் ஆற்றங்கரை மாயப்பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்

ஸ்ரீவைகுண்டம் ஆற்றங்கரை மாயப்பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2023-07-04 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றங்கரையில் இந்து காட்டுநாயக்கன் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மாயப்பெருமாள், பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிலில் கும்பாபிஷேக விழா ஜூலை.1-ந்தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மதியம், மாலையில் யாகசாலை பூஜைகளும், தீபாராதனையும் நடந்தது. நேற்று நான்காம் கால யாகசாலை பூஜையும், திவ்யஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனையை தொடர்ந்து கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து காலை 9.30 மணிக்கு மாயப்பெருமாள், பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிலின் கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் ெசய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்