புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய ஆடம்பர தேர் பவனி

விழுப்புரத்தில் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது.

Update: 2022-12-04 18:45 GMT

விழுப்புரம் நாப்பாளைய தெருவில் புகழ்பெற்ற புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு 148-ம் ஆண்டு பெருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் ஆலயத்தில் காலையில் திருப்பலி நிகழ்ச்சியும், மாலையில் தேர் பவனியும் நடந்தது.

ஆடம்பர தேர் பவனி

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதையொட்டி காலையில் கூட்டு திருப்பலி நடந்தது. இதையடுத்து இரவில் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஆடம்பர தேரில் புனித பிரான்சிஸ் சவேரியார் சொரூபம் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆடம்பர தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனியாக வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.

பின்னர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து நேற்று கொடியிறக்க நிகழ்ச்சி நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்