மாநில அளவிலான சிலம்பம் போட்டி: மாணவ-மாணவிகள் 12 பதக்கங்கள் பெற்று சாதனை

மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் கரூர் மாணவ-மாணவிகள் 12 பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

Update: 2022-08-29 17:23 GMT

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் மாநில அளவிலான சர்வதேச சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில், கரூர் மாவட்டம் நொய்யல் அருகே குந்தாணிபாளையம் பகுதியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.இதில், 5 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 12 பதங்கள் பெற்று சாதனை படைத்தனர். இதையடுத்து பதங்களுடன் ஊர் திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் மாலை அணிவித்து, வரவேற்பு கொடுத்து வாழ்த்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்