மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி

மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி நடைபெற்றது.

Update: 2023-04-02 18:18 GMT

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அளவிலான இறகு பந்து போட்டி பெரம்பலூரில் உள்ள மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கத்தின் உள்ளரங்கில் நேற்று நடந்தது. ஆண்களுக்கு இரட்டையர் பிரிவில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இருந்து மொத்தம் 28 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. போட்டியில் வீரர்கள் ஆர்வத்துடன் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் முதல் இடத்தை பிடித்த அணியின் வீரர்களுக்கு தலா ரூ.15 ஆயிரமும், 2-ம் இடம் பிடித்த அணியின் வீரர்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும், 3, 4-ம் இடம் பிடித்த அணியின் வீரர்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும் மற்றும் சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்