அனுமதியின்றி ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடத்தினால் கடும் நடவடிக்கை

சிவகங்கை மாவட்டத்தில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Update: 2022-07-14 18:36 GMT

சிவகங்கை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையுள்ள காலங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு மஞ்சுவிரட்டு விழாக்கள் அரசின் வழிகாட்டுதல்களின்படி அனுமதி வழங்கப்பட்டு விழாக்கள் நடைபெற்று வருகிறது. அரசாணையில் அனுமதி வழங்கப்பட்ட காலங்கள் தவிர பிற நாட்களில் அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு மஞ்சுவிரட்டு விழாக்கள் நடத்தக்கூடாது என கேட்டுக் கொள்ளப்படுகிறது. அரசு விதிமுறைகளை மீறி நடத்தினால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி எச்சரித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்