மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்

கொள்ளிடம் அருகே மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்

Update: 2023-04-28 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே கூழையார் கிராமத்தில், அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதில் கொள்ளிடம் ஒன்றியக்குழு உறுப்பினர் அங்குதன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலமானது பள்ளியில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இதில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பி சென்றனர். மேலும் வீடு, வீடாக சென்று விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். ஊர்வலத்தில் பள்ளி தலைமை ஆசிரியை உமா, உதவி தலைமை ஆசிரியை இந்திராகாந்தி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.



 


Tags:    

மேலும் செய்திகள்