ஆற்றில் மூழ்கிய மாணவர் உடல் கரை ஒதுங்கியது

வலங்கைமான் அருகே ஆற்றில் மூழ்கிய மாணவர் உடல் கரை ஒதுங்கியது.;

Update:2022-06-10 22:53 IST

வலங்கைமான், ஜூன்.11-

வலங்கைமான் அருகே ஆற்றில் மூழ்கிய மாணவர் உடல் கரை ஒதுங்கியது.

ஆற்றில் மூழ்கி மாயம்

வலங்கைமான் அருகே உள்ள அரித்துவாரமங்கலம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட தென்குவளவேலி மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் அந்தோணிராஜ். இவருடைய மகன் லாரன்ஸ்(வயது15). 10-ம் வகுப்பு மாணவரான லாரன்ஸ் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள வெண்ணாற்றில் ஓடத்துறை அருகே நண்பர்களுடன் குளிக்க சென்றான். அப்போது மாணவர் லாரன்ஸ் திடீரென நீரில் மூழ்கி மாயமானதாக கூறப்படுகிறது.இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வலங்கைமான், நீடாமங்கலம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து வெண்ணாற்றில் மூழ்கி் மாயமான பள்ளி மாணவனை தேடினர். ஆனால் மாணவரை மீட்க முடியவில்லை.

பிணமாக கரை ஒதுங்கினான்

இந்தநிலையில் நேற்று அதிகாலை மாணவர் லாரன்ஸ் உடல் ஆற்றங்கரையோரம் கரை ஒதுங்கியது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து அரித்துவாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்றில் மூழ்கி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்