கிணற்றில் மூழ்கி பாலிடெக்னிக் மாணவர் சாவு

கிணற்றில் குளிக்க சென்ற பாலிடெக்னிக் மாணவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-02-13 18:45 GMT

சிவகங்கை, 

கிணற்றில் குளிக்க சென்ற பாலிடெக்னிக் மாணவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

பாலிடெக்னிக் மாணவர்

சிவகங்கை மாவட்டம் கல்லலை அடுத்த நடுவிக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மனைவி செல்வி. இவர்களது மகன் தீபக் (வயது 17). இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் தீபக் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து சூரக்குளத்தில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் தண்ணீரில் மூழ்கினார். இதனை கண்ட அவரது நண்பர்கள் அக்கம்பக்கத்தினரை அழைத்து வந்து தீபக்கை தேடினார்கள்.

2½ மணி நேரம் தேடல்

பின்னர் இதுகுறித்து சிவகங்கை தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பாதாள கரண்டி கொண்டு தண்ணீரில் மூழ்கிய தீபக்கை தேடினா். சுமார் 2½ மணி நேர தேடலுக்குப் பிறகு தீபக்கின் உடலை கைப்பற்றினர். இதைதொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுதொடர்பாக சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்