நண்பர் இறந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை

நண்பர் இறந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-06-30 15:34 GMT

பரமக்குடி, 

பரமக்குடி அருகே உள்ள தலைகால் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது28). இவர் திருச்சியில் லோடுமேனாக வேலை பார்த்து வந்துள்ளார். அவருடன் வேலை பார்த்த நண்பர் ஒருவர் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 4 தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். அன்று முதல் பிரபாகரன் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் சொந்த ஊருக்கு செல்வதாக திருச்சியில் இருந்து பரமக்குடி வந்துள்ளார். பரமக்குடி வந்த அவர் பஸ் நிலையம் அருகில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி இருந்தார். இந்தநிலையில் அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து விடுதி உரிமையாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே பரமக்குடி போலீசார் அங்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்