தொழிலாளி திடீர் சாவு

சிவகாசியில் தொழிலாளி திடீரென இறந்தார்.

Update: 2023-01-13 19:01 GMT

சிவகாசி,

சிவகாசி அருகே உள்ள பூவநாதபுரம் இந்திராகாலனியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 55). கட்டிட தொழிலாளி. இந்தநிலையில் சம்பவத்தன்று சிவகாசியில் நடைபெற்ற கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பணியில் இருந்த டாக்டர், ஆறுமுகத்தை பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து ஆறுமுகத்தின் மனைவி கணபதி சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்