தூக்குப்போட்டு பெண் தற்கொலை

தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்துகொண்டார்.;

Update:2022-05-22 23:14 IST

திருப்பரங்குன்றம், 

மதுரை விளாச்சேரி ரோடு பகுதியை சேர்ந்த திருநகர் திருக்குமரன் நகரில் வசித்து வருபவர் ஜெயபாண்டி. இவரது மனைவி யுவராணி (வயது26). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வெவ்வேறு இடத்தில் தனித்தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் யுவராணி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர் பாக தகவல் அறிந்த திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்