தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2022-09-23 18:45 GMT

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை தேர்பேட்டையை சேர்ந்தவர் ராஜா (வயது 44). கூலித்தொழிலாளி. மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான இவர், மது போதையில் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார் அவரது உடலை கைப்பற்றி, அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்