பாலக்கோடு அருகே, வெவ்வேறு இடங்களில் பெயிண்டர் உள்பட 2 பேர் தற்கொலை

பாலக்கோடு அருகே, வெவ்வேறு இடங்களில் பெயிண்டர் உள்பட 2 பேர் தற்கொலை

Update: 2022-10-03 18:45 GMT

பாலக்கோடு, அக்.4

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மூங்கப்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 40). கார் பெயிண்டர். இவருக்கு இன்னும் திருணமாகவில்லை. இந்த நிலையில் முருகன் வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதேபோல் பாலக்கோடு அடுத்த பிக்கனஅள்ளியை சேர்ந்தவர் சக்திவேல் (35). இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த 2 தற்கொலை சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்