திருச்செங்கோடு அருகேவாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2023-01-09 18:45 GMT

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு அருகே குமரமங்கலம் புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜூ. இவருடைய மகன் சஞ்சய் (வயது 20). ஐ.டி.ஐ. முடித்துள்ள இவர் டயர் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இதையடுத்து அந்த வேலையை விட்டு விட்டு அவருடைய அண்ணனுடன் ஆட்டோ ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சஞ்சய் வீட்டில் யாரும் இல்லாத போது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற திருச்செங்கோடு ரூரல் போலீசார் சஞ்சய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சஞ்சய் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்