முதியவர் தற்கொலை

Update: 2023-01-11 18:45 GMT

அரூர்:

அரூர் அருகே உள்ள பச்சனம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 65). இவர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அவர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு அரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி கணேசன் உயிரிழந்தார். இதுகுறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்