முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2023-01-11 18:45 GMT

வெண்ணந்தூர்:

சேலம் மாவட்டம் மேட்டூர் கண்ணாமூச்சி உப்புகல்லூர் காலனி பகுதியை சேர்ந்தவர் ராமன் (வயது 80). இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வெண்ணந்தூர் அடுத்த பழந்தின்னிப்பட்டி பகுதிக்கு விவசாய கூலி வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று ராமன் பழந்தின்னிப்பட்டி பஸ் நிறுத்த பகுதியில் உள்ள மடத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப்பார்த்த அக்கம், பக்கத்தினர் உடனடியாக வெண்ணந்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்