கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

Update: 2023-05-01 19:00 GMT

ஓசூர்:

சூளகிரி தாலுகா சாமனப்பள்ளி அருகே உள்ள சீபம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 35). கூலித்தொழிலாளி. இந்த நிலையில் கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த சீனிவாசன் கடந்த 29-ந் தேதி ஓசூர் அருகே காரப்பள்ளியில் உள்ள வீட்டில் விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சீனிவாசன் இறந்தார். இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்