மோகனூரில்கட்டிட தொழிலாளி தற்கொலை

Update: 2023-05-30 19:00 GMT

மோகனூர்

மோகனூர் அடுத்த சின்னத்தம்பி பாளையத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 35). கட்டிட தொழிலாளி. இவருக்கும், விருதுநகர் மாவட்டம், சிவகாசியை அடுத்த, மீனம்பட்டி பகுதியை சேர்ந்த தங்கத்தாய் (22) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது அவர்கள் மோகனூர் சுப்பிரமணியபுரம் பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சீனிவாசன், தனது மனைவி, குழந்தையை மாமனார் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் சீனிவாசன் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே சீனிவாசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டது. இது குறித்து அவரது மனைவி தங்கத்தாய் மோகனூர் போலீசில் புகார் கொடுத்தாா். இதன்பேரில் மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்