மதுரை சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
மதுரை சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மதுரை,
மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக இருந்தவர், ஆனந்த்.
இவர் கடந்த 2020-ல் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்த வழக்கில், சில ஆவணங்களை கோர்ட்டில் ஒப்படைக்காமல் இருந்ததாக தென்மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க்கிற்கு புகார் வந்தது. இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணைக்கு பின் ஆனந்தை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டார். மேலும் துறை ரீதியான விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.