புன்னகேஷ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
நெமிலி புன்னகேஷ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
நெமிலி
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் உள்ள விசாலாட்சி அம்மன் சமேத புன்னகேஷ்வரர் கோவிலில் வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட விசாலாட்சி அம்மன் சமேத புன்னகேஷ்வரர் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.