டாஸ்மாக் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டுமென மாநில சம்மேளன கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.;
மாநில சம்மேளன கூட்டம்
திருவண்ணாமலையில் டாஸ்மாக் ஊழியர் சம்மேளனத்தின் மாநிலக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் பொன்முடி தலைமை தாங்கினார். பொது செயலாளர் திருச்செல்வன், பொருளாளர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை மாவட்ட தலைவர் மார்கண்டேயன் வரவேற்றார்.
கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் கொள்ளை முடிவின் படி 500 டாஸ்மாக் கடைகள் கடந்த ஜூன் மாதம் 22-ந் தேதி மூடப்பட்டது. மூடப்பட்ட கடைகளில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு முறையாக பணி வழங்கப்படவில்லை. தென்சென்னை, வேலூர், திருப்பூர், திருவண்ணாமலை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பணி மூப்பு பட்டியல், கலந்தாய்வு வெளிப்படை தன்மையில் நடத்தபடவில்லை.
காலமுறை ஊதியம்
டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டபடி ஊதியம் வழங்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு வார விடுமுறை, தேசிய பண்டிகை கால விடுமுறை, மிகை நேரம் சட்டங்கள் படி வழங்க வேண்டும். டாஸ்மாக் நிறுவனத்தில் 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகளான பணிவரன்முறை, காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட முதல்- அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டாஸ்மாக் ஊழியர்கள் மீது சமூக விரோதிகளின் தாக்குதல் அதிகாரித்து வருகின்றது. எனவே மக்கள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதி, வயல் வெளி போன்ற இடங்களில் பாதுகாப்பில்லாமல் உள்அள கடைகளை இடமாற்றம் செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் சக்கரவர்த்தி நன்றி கூறினார்.