சிவகங்கை அடுத்த சுந்தரநடப்பு கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ்(வயது 30). இவர் எந்த வேலையும் செய்யாமல் இருந்து வந்தாராம். இதனால் அவரது தாயார் வெள்ளை நாச்சியார் தேவராஜனை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தேவராஜ் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.