கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

வள்ளியூரில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-04 19:55 GMT

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். வள்ளியூரில் இருந்து ஏர்வாடி செல்லும் ரோட்டில் நின்று கொண்டிருந்த ஏர்வாடி பொத்தையடியை சேர்ந்த ஸ்டாலின் (வயது 19) என்பவரை சோதனை செய்ததில் 30 கிராம் கஞ்சாவை சட்டவிரோதமாக விற்பனை செய்ய வைத்திருந்தது தெரியவந்தது. உடனே போலீசார், அவரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்