கஞ்சா விற்ற வாலிபர் கைது

ஜோலார்பேட்டை அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-12 18:00 GMT

ஜோலார்பேட்டை பகுதியில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் காதர் கான் மற்றும் போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி அருகே உள்ள ஆட்டுக்கார பொன்னுசாமி வட்டம் பகுதியில் சந்தேகத்தின் பேரில் சுற்றி திரிந்தவரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர் அதேப் பகுதியைச் சேர்ந்த நந்திராயன் என்பவரின் மகன் மணிகண்டன் (வயது 32) என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையெடுத்து அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர் மீது வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்