கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-06-07 16:51 GMT

குமணன்தொழு பகுதியில், மயிலாடும்பாறை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குமணன்தொழு அய்யாவு தெரு அருகே, கஞ்சா விற்றுக்கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த குபேந்திரன் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் குமணன்தொழுவை சேர்ந்த குமார் (36) மூலம், திருப்பூரை சேர்ந்த கதிரேசன் (34) என்பவரிடம் இருந்து கஞ்சாவை விற்பனைக்காக வாங்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவாக உள்ள அவர்கள் 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்