வாகனம் மோதி வாலிபர் பலி

திண்டுக்கல் அருகே வாகனம் மோதி வாலிபர் ஒருவர் பலியானார்.

Update: 2022-10-03 19:30 GMT

திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில், பித்தளைப்பட்டி பிரிவு அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் நேற்று நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்