பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

Update: 2022-10-07 18:45 GMT

பரமத்திவேலூர்:

பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி வெள்ளிக்கிழமை சிவன் மற்றும் நந்தி சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெற்றது. அதன்படி பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஸ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர், பரமத்திவேலூர் வல்லப விநாயகர் கோவிலில் உள்ள விசாலாட்சி சமேத பானலிங்க விஸ்வேஸ்வரர், கோப்பணம்பாளையத்தில் உள்ள ‌பரமேஷ்வரர் உள்ளிட்ட கோவில்களில் சிவன், நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்