சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு
சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.;
திருக்கடையூரில் சீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று மாசி மாத வியாழக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதனையொட்டி சீரடி சாய்பாபாவுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதனைத் தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு சாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.