நாமகிரிப்பேட்டையில் ரூ.18 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

Update: 2023-09-27 19:00 GMT

ராசிபுரம்:

நாமகிரிப்பேட்டையில் 280 மஞ்சள் மூட்டைகள் ரூ.18 லட்சத்துக்கு ஏலம் போனது.

மஞ்சள் 

ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டையில் உள்ள ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்க கிளை வளாகத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. அரியாக்கவுண்டம்பட்டி, நாமகிரிப்பேட்டை, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மஞ்சளை ஏலத்துக்கு கொண்டு வந்தனர். ஒடுவன்குறிச்சி, ஈரோடு, சேலம், ஆத்தூர் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மஞ்சளை ஏலம் எடுக்க வந்தனர். இதில் விரலி ரகம் 200 மூட்டைகளும், உருண்டை ரகம் 75 மூட்டைகளும், பனங்காலி ரகம் 5 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டன.

ரூ.18 லட்சத்துக்கு ஏலம்

ஏலத்தில் விரலி ரகம் குறைந்தபட்சம் குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 689 முதல் அதிகபட்சமாக ரூ.14 ஆயிரத்து 389-க்கும், உருண்டை ரகம் குறைந்தபட்சம் குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 802-க்கும், அதிகபட்சமாக ரூ.11 ஆயிரத்து 602-க்கும், பனங்காலி ரகம் குறைந்தபட்சம் குவிண்டால் ரூ.5 ஆயிரத்து 569-க்கும், அதிகபட்சமாக ரூ.9 ஆயிரத்து 502-க்கும் விற்பனையானது.

மொத்தம் 280 மஞ்சள் மூட்டைகள் ரூ.18 லட்சத்துக்கு ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரத்தை விட இந்த வாரம் அதிகளவில் மஞ்சள் வரத்து இருந்தது. ஆனால் விலை கடந்த வாரம் போல் நீடித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்