வனப்பகுதியில் கார் டிரைவர் மர்மச்சாவு
வாணாபுரம் அருகே வனப்பகுதியில் கார் டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
வாணாபுரம்
வாணாபுரம் அருகே வனப்பகுதியில் கார் டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண் பிணம்
வாணாபுரம் அருகே உள்ள ராதாபுரம் பூமாலை காடு வனப்பகுதியில் ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் வாணாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கார் டிரைவர்
விசாரணையில் இறந்தவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம், சேராப்பட்டு பகுதியைச் சேர்ந்த குப்பன் மகன் ஜெயக்குமார் (வயது 40) என்பதும், சொந்தமாக கார் வைத்து ஓட்டி வந்ததும் என்பதும் தெரிய வந்தது.
இவருக்கு சரோஜா (38) சுமதி (28) கனகா (30) ஆகிய 3 மனைவிகள். இதில் சரோஜா, சுமதி இருவரும் பிரிந்து சென்றுவிட்டனர். கனகா ஜெயக்குமாருடன் ஜவ்வாதுமலையில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று ஜெயக்குமார் ஜவ்வாதுமலை பகுதியில் இருந்து தனது தந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து அவரை பார்த்துவிட்டு, பின்னர் காருக்கு இன்சூரன்ஸ் செலுத்துவதற்காக திருவண்ணாமலைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு கென்றார். ஆனால் அவர் சேராப்பட்டில் உள்ள வீட்டிற்கும் செல்லவில்லை, திருவண்ணாமலைக்கும் செல்லவில்ைல.
இந்த நிலையில் அவர் வனப்பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
கொலையா? போலீசார் விசாரணை
அவர் எதற்காக வனப்பகுதிக்கு வந்தார் என்றும், அவரை கடத்திச் சென்று யாராவது கொலை செய்தார்களா? அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.