சிறுமியை கடத்தி திருமணம்

சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-06 16:39 GMT

உளுந்தூர்பேட்டை, 

கள்ளக்குறிச்சி அருகே ரோடுமாமந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அருள்பிரகாஷ் (வயது 27). பொக்லைன் டிரைவர். இவர் உளுந்தூர்பேட்டை பகுதியில் தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்த 18 வயதுடைய சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் உளுந்தூர்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அருள்பிரகாஷ் கள்ளக்குறிச்சியில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் அருள்பிரகாசை போலீசாா் கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்