விபத்தில் காயமடைந்தவர் சாவு

தூத்துக்குடியில் விபத்தில் காயமடைந்தவர் இறந்தார்.

Update: 2023-06-07 18:45 GMT

தூத்துக்குடி, ஜார்ஜ் ரோடு காந்திநகரை சேர்ந்தவர் பாலச்சந்தர் (வயது 50). இவர் நேற்று முன்தினம் தூத்துக்கு பீச் ரோட்டில் ரோச் பூங்கா அருகே சென்று கொண்டு இருந்தாராம். அப்போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் திரேஸ்புரத்தைச் சேர்ந்த லிங்கேசுவரன் (31) என்பவர் வந்தாராம். அப்போது எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பாலச்சந்தர் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்