சரக்கு வேன் திருடியவர் கைது

சரக்கு வேன் திருடியவர் கைது;

Update:2022-09-11 01:17 IST

தஞ்சை ரெட்டிப்பாளையம் சாலையில் மருத்துவக்கல்லூரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை மறித்தனர். தொடர்ந்து சரக்கு வேனை ஓட்டிவந்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் பட்டுக்கோட்டையை சேர்ந்த மாரிமுத்து (வயது 38) என்பதும், அவர் ஓட்டிவந்த சரக்கு வேன் திருடப்பட்டது என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர். மேலும் திருட்டு சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்