பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

நெல்லையில் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-07-31 18:46 GMT

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சூளைவாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் வர்க்கீஸ் (வயது 26). இவர் கடந்த மாதம் நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அத்துமீறி உள்ளே நுழைந்து, அங்கு இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி தவறாக நடக்க முயன்றாராம். இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில், நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வர்க்கீசை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்