மரக்கிளை விழுந்து முதியவர் சாவு
காரிமங்கலம் அருகே மரக்கிளை விழுந்து முதியவர் இறந்தார்.;
காரிமங்கலம்
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே சொட்டாண்டஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 60). இவர் நேற்று வேலை பார்த்து கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராத விதமாக மரக்கிளை ஒன்று அவர் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னசாமி இறந்தார். இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.