முதியவர், ஆற்றில் பிணமாக கிடந்தார்

திருக்காட்டுப்பள்ளியில் மாயமான முதியவர், ஆற்றில் பிணமாக கிடந்தார்.;

Update:2023-04-23 03:06 IST

திருவையாறு:

திருக்காட்டுப்பள்ளியில் காய்கறி மார்க்கெட்டில் ஏலக்கடை உள்ளது. இதில் திருக்காட்டுப்பள்ளி லைன்கரை ராதாதோப்பை சேர்ந்த அழகர்சாமி (வயது60) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மதியம் வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால் அவர் வீட்டுக்கு செல்லாமல் மாயமாகி விட்டார். இதனால் அழகர்சாமியை அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர்..இந்த நிலையில் திருக்காட்டுப்பள்ளி குடமுருட்டி ஆற்றில் அழகர்சாமி பிணமாக கிடந்துள்ளார். இதை பார்த்த அவரது உறவினர்கள் திருக்காட்டுப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அழகர்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பூதலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பான புகாரின் பேரில் திருக்காட்டுப்பள்ளி சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரையரசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்