வெயிலுக்கு மயங்கி விழுந்தவருக்கு போலீசார் உதவி

வெயிலுக்கு மயங்கி விழுந்தவருக்கு போலீசார் உதவி செய்தனர்.;

Update:2023-04-22 00:29 IST

கரூரில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த கடும் வெயிலில் கரூர் பஸ் நிலைய ரவுண்டானா பகுதியில் அடையாளம் தெரியாத கண்பார்வை இழந்த மாற்றுத் திறன் கொண்ட 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரவுண்டானா பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை அப்பகுதியில் போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு போக்குவரத்து போலீசார் உள்பட 3 போலீசார் அவரை அடையாளம் கண்டு, 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின் பெயரில் அப்பகுதிக்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மூலமாக அந்த முதியவரை மீட்டு கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்