ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.;

Update:2022-10-13 00:13 IST

ஆலங்குடி:

ஆலங்குடி அருகே கல்லாலங்குடி திருப்பதி நகரை சேர்ந்த சொக்கலிங்கம் மகள் பிரியா (வயது 21). பி.ஏ. பட்டதாரி. இவரும், ஆலங்குடி கே.வி.எஸ். தெருவை சேர்ந்த சுப்பையா மகன் சிவாஜி (29) என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் 2 பேரும் ஆலங்குடி அருகே உள்ள நெம்மக்கோட்டை சித்திவிநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து இருதரப்பின் பெற்றோருக்கும் போலீசார் தகவல் ெதரிவித்தனர். பின்னர் அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததையடுத்து காதல் ஜோடியை போலீசார் அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்