தீ விபத்தில் கூரை வீடு எரிந்து சேதம்

தீ விபத்தில் கூரை வீடு எரிந்து சேதம்

Update: 2023-02-13 18:45 GMT

ரிஷிவந்தியம்

சங்கராபுரம் தாலுகா எகால் கிராமத்தை சேர்ந்த மப்பு மகன் மாரிமுத்து என்பவருக்கு சொந்தமான கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதையடுத்து வீட்டில் இருந்த மாரிமுத்து மகன் குமார் அலறியடித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே ஓடி வந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கூரை வீட்டின் மீது தண்ணீரை ஊற்றியும், கூரை வேயப்பட்ட சோகயை பிடுங்கி எரிந்தும் தீயை அணைத்தனர். இதில் வீட்டிலிருந்த நெல் மூட்டைகள், துணி, டி.வி., மற்றும் பாத்திரங்கள் உளிட்ட ரூ.30 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதம் அடைந்தன. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்