குட்கா பதுக்கி வைத்திருந்த கடை, வீட்டுக்கு சீல்

மானாமதுரையில் குட்கா பதுக்கி வைத்திருந்த கடை, வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது.

Update: 2022-06-17 18:41 GMT

மானாமதுரை,

சிவகங்கை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் மற்றும் போலீசார் இணைந்து குட்கா விற்பனையை தடுக்க மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மானாமதுரை சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகானந்தம், ராமசந்திரன், உணவு பாதுகாப்பு ஆய்வாளர் சரவணகுமார் மற்றும் போலீசார் மானாமதுரையில் அதிரடி சோதனை நடத்தினர். குட்கா பதுக்கி வைத்திருந்ததாக வடிவேல் என்பவரது கடைக்கும், தவமணி என்பவர் வீட்டிற்கும் சீல் வைத்தனர். இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். குட்கா விற்றால் கடைகள் சீல் வைத்து கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்