வாகனம் மோதி வாலிபர் பலி

ஓசூரில் வாகனம் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-05-04 18:45 GMT

ஓசூர்

பர்கூர் தாலுகா சக்கில்நத்தம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 21). இவர் சூளகிரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். கடந்த 2-ந் தேதி மாலை அவர் கிருஷ்ணகிரி- ஓசூர் சாலையில் பேரண்டப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் கார்த்திகேயன் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து ஓசூர் அட்கோ போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்