டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி

புளியங்குடி அருகே டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலியானார்.

Update: 2023-05-25 20:12 GMT

புளியங்குடி:

புளியங்குடி சிந்தாமணி அம்பேத்கர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் வீரபாண்டி. இவருடைய மகன் அஜித்குமார் (வயது 25). டிராக்டர் டிரைவரான இவர் நேற்று முன்தினம் இரவில் புளியங்குடி அருகே நவாச்சாலை ரோட்டில் கோட்டமலைப் பகுதி வயலில் இருந்த இலவம்பஞ்சு மூட்டைகளை டிராக்டரில் ஏற்றினார். பின்னர் அங்கிருந்து டிராக்டரில் வந்து கொண்டிருந்தார். நவாச்சாலையில் டிராக்டர் சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த அஜித்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அஜித்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்