தொழிற்சாலையில் திருடிய வாலிபர் கைது

கடலூர் முதுநகர் அருகே தொழிற்சாலையில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-24 18:45 GMT

கடலூர் முதுநகர்,

கடலூர் முதுநகர் அருகே செம்மங்குப்பத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்த ரூ.60,000 மதிப்புள்ள 3 'ஸ்டீன்லெஸ் ஸ்டீல்' பைப்புகளை மர்மநபர் திருடிச்சென்றார். இது பற்றி தொழிற்சாலையின் பாதுகாப்பு அதிகாரி நம்பிராஜன் கடலூர் முதுநகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், குடிகாடு பகுதியை சேர்ந்த பிரசாந்த் (வயது 28) என்பவர் தொழிற்சாலையில் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ஸ்டீல் பைப்புகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்