2 மாதங்களாக தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

2 மாதங்களாக தலைமறைவாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-14 21:33 GMT

அம்பை:

அம்பை வேம்பையாபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பரமசிவன் (வயது 29). இவர் கடந்த 2017-ம் ஆண்டு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் பரமசிவன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு கடந்த 2 மாத காலமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து அவரைப் பிடிக்க நீதிமன்றத்தில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து பரமசிவனை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்படி, அம்பை அனைத்து மகளிர் போலீசார், பரமசிவனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்